எங்கிருக்கிறாய் இரவில் நீ
................................................................
அதி காலை நேரம்
அழைத்தேன்
உன்னை...
கனவுகள்
கலைந்தபடி
கண்களில்
புத்துணர்ச்சியோடு......
கிரிச்...
கிரிச்...என
பறவைகளும்
என் வீட்டு கோழிகூட
உன்
வருகையை
வரவேற்கிறதே....
சற்று வெளிச்சம்
எத்தனை
வண்ணங்களில்
மெல்ல ...
மெல்ல ...
உன்
வருகையை
உறுதிபடுத்தியது..
ஆம்
வருகிறாய்.......
இனி... பொழுதும்
உன்னுடன் தான்
வயலில்
உள்ள நெற்பயிர்களும்
உன்னை கண்டவுடன்
மகிழுதே...
நான்
எங்குசென்றாலும்
என்னையே
சுற்றி வருவாய்......
நீ
என்னைமட்டுமல்ல
இந்த உலகத்தையே
ஆள்கிறாய்........
காலை
முதல் மாலைவரை
மட்டுமே
என்னோடு இருக்கிறாய்...
உன்னோடு
இருக்கின்ற
நான்
எப்பொழுதும்
ஆரோக்கியமாக
உணர்கிறேன்.....
தினமும்
நீ
செய்யும்
வர்ணஜாலம்
எத்தனை அழகு.......
மாலையாகிவிட்டால்
மலைகள் பின்னால்
ஒளிந்துகொண்டு
எட்டிபார்க்கிறாய்....
எல்லோரையும்
மகிழ்விக்கும்
நீ
என்னைமட்டும்
ஏமாற்றி
விடுகிறாய்
இரவுநேரத்தில்......
எப்பொழுது
நாம்
சேர்ந்திருப்பது
எல்லாநேரமும்
உன்னோடு
வாழ்நாள் முழுவதும்.........
ஒரேஒரு
வருத்தம்...
இரவில் மட்டும்
என்னை
தவிக்கவிட்டு
எங்கே
சென்றுவிடுகிறாய்
தனியாக...........
இன்று முதல்
தேடுகிறேன்
உன்னை
எங்கிருக்கிறாய்
இரவில்
நீ
கதிரவா..........ரோஷினி

No comments:
Post a Comment