Thursday, 29 November 2012



வாழ்வது 

ஒருமுறைதான்


...........................................
ஏய்  மானுடா .........

உலகத்தில்
 உள்ள எல்லா
 ஜீவராசிகளைப்போல்
நீயும்
 ஒரு ஜீவராசிதான் ......

உனக்கு
இருக்கிற உரிமையும்
உன்னைப்போல்
மரம் செடி கொடி
உயிரினங்கள்
எல்லாவற்றுக்கும்
 உண்டு .........ஆனால்
நீ மட்டும் ஆதிக்கம் செய்கிறாய் ...

உனக்கு நீயே
 ஆறறிவு யென்று
நினைத்துக்கொண்டு
இயற்கை  விதித்திருக்கிற
விதிமுறைகளை  மீறுகிறாய் ....

மற்ற ஜீவராசிகளை அழித்து
இந்த பூமி
 உன்னுடையதுஎன்கிறாய் ......

அப்படி செய்கின்ற நீ
 இன்னும் சில காலங்களில்

குடிக்ககூட நீரில்லாமலும்
சுவாசிக்க தூமையான காற்று
மின்சாரம்
 உண்ண  உணவில்லாமலும்
இயற்கை சீர்ற்றத்தினால்


அனாதையாகி
யாரும்  இல்லாமல்
தனியாக
நிற்கபோகிறாய் ...
என்பதை மறந்துவிடாதே

அது உன்
 கையில் தான் உள்ளது
இன்றுமுதல்
இயற்கையோடு
இன்பமாக
ஒன்றி வாழு ....

தாமாதிக்காதே .
வாழ்வது
ஒருமுறைதான்
 அதை வாழ்ந்துபாரு ..

உனக்கு கிடைக்கும்  ஊரில்
நல்லபேரு

வருகின்ற  தலைமுறை
 வாழ்த்தும் பல  நூறு ....................ரோஷினி




எட்டுகால்பூச்சி 


-----------------------------------

அடி பெண்ணே 

உனக்கு 
தேவையானபோது 
உபயோகப் படுத்திவிட்டு 

தேவைமுடிந்தவுடன் 
என்னை 
துணை ( கணவன் )என்றுகூடபாராமல் 
கொலை செய்து 
தின்றும்விடுகிறாயே ............ரோஷினி 

நடிகை ......


பணத்திற்காக 
தன் 
பிரசவத்தையே 
படம் போட்டு 
காட்டினாள்
 உலகம் முழுவதும் ...........ரோஷினி 

Friday, 23 November 2012

jvjindia@gmail.com

வெற்றி தேவை

--------------------------------------


`
வாழ்கையில் ...........
கண்ணீருடன்  இருந்தாலும்
புன்னகை தேவைப் படுகிறது

வலிகள் இருந்தாலும்
சுகம் தேவைப் படுகிறது

அன்பு இருந்தாலும்
பண்பு தேவைப் படுகிறது

உண்மை இருந்தாலும்
உயர்வு தேவைப் படுகிறது

தோல்வியே........ தொடர்ந்தாலும்
வெற்றி தேவைப் படுகிறது ...........ரோஷினி

நட்புடன் வாழ 

----------------------------------------
உறவுகள் தேவைதான் 
உலகத்தில் வாழ்வதற்கு .. 
ஆனால் 
உன்னைப்போல் 
 நண்பர்கள் தேவை 
நிஜமாய்
 நட்புடன் வாழ்வதற்கு ...............ரோஷினி 


-- 


கனவிலாவது 

.....................................................
இசையைகேட்க 
இதயம் கொடுத்த
 இறைவா ......

கவிதைஎழுத 
ஒரு 
காதலியை கொடு 
கனவிலாவது.................ரோஷினி 


பரிசு 

-----------------
புன்னகைக்கும் 
அவளின்
  இதழ்கள்...

என் 
 இதயத்திற்கு 
அவள்
 கொடுத்த 
அன்பு  பரிசு ............ரோஷினி 


அவளுடன்  நான்

-----------------------------------------

பல 
கோடுகள் தானே                                                         
 சித்திரமாகிறது 

அன்று 
கொடுக்கப்பட
 தீர்ப்பு  தான் 
இன்று 
மாற்றி  எழுதப்படுகிறது 

பூட்டிய 
கதவுகள் தானே 
மீண்டும் திறக்கப்படுகிறது 

இருட்டுதானே  
பிறகு வெளிச்சமாகிறது 

அதனால் தான் 
கனவுகாண்கிறேன் 
என்றாவது 
ஒரு நாள் 

பலிக்காதாயென்று .............ரோஷினி 


தெரியாமல் 

---------------------------
வெகுநேரம் 
கால்மேல்  கால் 
போடுகொண்டிருந்தாள் ...
நான்
 பார்க்கும்போது ..........

 நினைத்தேன் 
ஓ ..இதுதான் 
பெண்ணுரிமையோவென்று 

அவளின்
  கண்கள் மட்டும் 
மறுத்தன
உண்மையைச்சொல்ல ...

ஆனால் 
 அவளுடைய  ஆடை 
கிழித்திருப்பது
 தெரியாமல்.......ரோஷினி  


புரட்சிப்பெண் 

-----------------------------------------

வெள்ளை 
 புடவையில் 
கலர் பெயிண்டிங் 
செய்கிறாள் 
விதவை ..........ரோஷினி 


அவளின் இதயமும் 

------------------------------------------------------------

அவளின்  மூச்சு  காற்று 
பட்டதால் 
சூடானது 
 எனது 
உடல் மட்டுமல்ல 
வேகமாக துடிக்கும் 
அவளின் 
 இதயமும் ...........ரோஷினி 



அவளை நினைத்து 

-----------------------------------------------------

உறக்கம்  வரவில்லை 
எனக்கு .... 
பொழுது விடியும்வரை 
என் வீட்டு 
மொட்டை மாடியில் 
வின் மீன்களுக்கும் தான் .... ரோஷினி 










Thursday, 22 November 2012

தேன்கனியா

----------------------------- 

நெடிய கருங்கூந்தல் 
மயக்கும் காந்தவிழி 
நெற்றியில் தெரியும் வட்டநிலா 
பளபளக்கும்  சிவந்த கன்னம் 
ரீங்காரம் மீட்டும்  காதணி 
ஜல் ஜல் கொலுசு ஒலி 
தெய்வீக சிரிப்பு 
அமைதி புன்னகை 
உயர்ந்து கீழிறங்கும்  புருவங்கள் 
ஒட்டியாணம் அணிந்த இடுப்பு 
பால் நிற பற்கள் 
குவிந்த உதடு 
வாழைத்தண்டு கால்கள் 
வனப்புமிகுந்த உடலமைப்பு 
இதுவல்லவோ பிரம்மனின் படைப்பு 
நீ ....
கன்னியா 
இல்லை தேன்கனியா ?..................ரோஷினி 


ஒற்றுமை 

--------------------

சிறு  குழந்தை
 வரைந்த .. ஓவியம்  கூட
தேச ஒற்றுமையைப்பற்றி .........

அனைவரும்
சமம்
இந்த நாட்டில் .......என்றது .

என்ன சொல்வது
 குழந்தையிடம்
இந்த உலகத்தில்
இவ்வளவு
வித்தியாசம்
இந்த
மனிதர்களிடத்தில் ............

கிழ் சாதி   மேல் சாதி
ஏழை       பணக்காரன்
கருப்பன்  வெள்ளையன்
தாய்மொழி  வேற்றுமொழி
மதம்            வேற்று மதம்

கூனிகுருகினேன் .............வேண்டுமா ?
இந்த பிறவியில்
இப்படியோரு
நரக வாழ்கை...........ரோஷினி



Wednesday, 21 November 2012


தாய்

...............................................
உன்னைப்போல் 
தாய்
 எனக்கு கிடைத்து
இருந்தால்
அநாதை
 இல்லை
நானும்..............ரோஷினி

Tuesday, 20 November 2012


எங்கிருக்கிறாய் இரவில் நீ 
................................................................


அதி காலை நேரம்
அழைத்தேன்
 உன்னை...

கனவுகள்
 கலைந்தபடி

கண்களில்
புத்துணர்ச்சியோடு......

கிரிச்...
கிரிச்...என
பறவைகளும்

என் வீட்டு கோழிகூட
உன்
 வருகையை
 வரவேற்கிறதே....

சற்று வெளிச்சம்
எத்தனை
 வண்ணங்களில்

மெல்ல ...
 மெல்ல ...
உன்
 வருகையை
உறுதிபடுத்தியது..

 ஆம்
வருகிறாய்.......

இனி... பொழுதும்
உன்னுடன் தான்

 வயலில்
 உள்ள நெற்பயிர்களும்
உன்னை கண்டவுடன்
மகிழுதே...
 
நான்
 எங்குசென்றாலும்
என்னையே
 சுற்றி வருவாய்......
நீ
 என்னைமட்டுமல்ல
இந்த உலகத்தையே
ஆள்கிறாய்........

காலை
முதல் மாலைவரை
மட்டுமே
என்னோடு இருக்கிறாய்...

உன்னோடு
 இருக்கின்ற  
நான்
 எப்பொழுதும்
ஆரோக்கியமாக
உணர்கிறேன்.....


தினமும்
நீ 
செய்யும்
வர்ணஜாலம்
எத்தனை அழகு.......

மாலையாகிவிட்டால்
மலைகள் பின்னால்
 ஒளிந்துகொண்டு
 எட்டிபார்க்கிறாய்....
எல்லோரையும்
மகிழ்விக்கும்
நீ

என்னைமட்டும்
ஏமாற்றி
விடுகிறாய்
இரவுநேரத்தில்......

எப்பொழுது
 நாம்
 சேர்ந்திருப்பது

எல்லாநேரமும்
உன்னோடு
வாழ்நாள் முழுவதும்.........

ஒரேஒரு
 வருத்தம்...

இரவில் மட்டும் 
என்னை
 தவிக்கவிட்டு 
எங்கே
 சென்றுவிடுகிறாய்
தனியாக...........

இன்று முதல்
தேடுகிறேன்
 உன்னை

எங்கிருக்கிறாய்
இரவில்
நீ
கதிரவா..........ரோஷினி






வயிற்று பசி
--------------------------------
இயற்கை
 சீற்றத்தினால்
கரை புரண்டு 
ஓடியது
 நீர்(கண்ணீர்)
 மட்டுமல்ல.....
தடம்புரண்ட
என்
வழ்கையும்தான்.....

எல்லாம் இழந்து
ஆதரவின்றி
ஒரு வேளை உணவுக்கே
கஷ்டப்பட்ட
நான்
விலைமாதுவாக
இன்று...........................ரோஷினி

  என்ன செய்ய போகிறேன்
--------------------------------------------
அதிகாலை
விடியும் முன்னே
விழித்தெழுவாள்.......

வீட்டுவேலைகள்
 எல்லாம்
செய்து என்னை 
எழுப்புவாள்...........


 பல்தேயித்து
குளிப்பாட்டி
எனக்கும்
 உணவளிப்பாள்.......

காலை மாலை
 இருவேளை
பள்ளி வாகனம்
வருமுன்பே
காத்திருப்பாள்............

வந்தவுடன்
 கட்டியணைத்து
முத்தமிடுவாள்...


வீட்டில்வந்து
உடைமாற்றி
தின்பண்டம்
கொடுப்பாள்........

பிறகு
பள்ளியில்
இன்று
நடந்ததுஎன
கேட்டு உளம்
மகிழ்வாள்......

மழலைமொழியில்
 நான் சொல்லும்
பாடல்கேட்டு
மதி மயங்குவாள்.........

நான் பெற்ற
செல்லமே
தங்கமே
என பூரிப்பில்
திளைப்பாள்....

இரவு உணவளித்து
மழலையாகி
கதைகள் சொல்லி
உறங்க வைப்பாள்.....


வண்டு
பூச்சிகள்
கடித்துவிடுமோ
என 
உறங்காமல்
விழித்திருப்பாள்..

என்ன செய்யபோகிறேன் 
நான்...............

எனக்காக
எல்லாம்
செய்யும்
என்
 அன்னைக்கு........ரோஷினி

எதிர்பார்ப்பு
-------------------

குழந்தைகளும்
கட்டுகிறார்கள்
வீடுகளை
நம் 
கனவுகளையும் 
சேர்த்துதான்.........ரோஷினி

Thursday, 15 November 2012


விளையாட்டு-------------------------------

எலிகளைகூட  ........
குளோனிங்
செய்யும்
விஞ்ஞானிக்கு
இல்லை
குழந்தை பாக்கியம்
என்ன விளையாட்டு
இறைவா........JVJ


உன்னிடம்
-----------------------
காதல்
கதைகள்
எழுத
தெரிந்த எனக்கு....

உன்
கண்களைப்பற்றி
எழுத தெரியவில்லை
ஏனெனில்....

நம் கண்கள்
பேசிய
வார்த்தைகள்தானே
 இங்கு 
கவிதையாய்
.உன்னிடம்..........JVJ


தென்றல் 

------------------------------
நான்
தொட்டதால்
காயமாகிப்போனது
அவளின்
மென்மையான
 உதடு ...........jvj 




பிரிவு
--------------------------
அதிகமாக
சிரித்தால்
பின்பு
அதிகமாக
அழநேரிடும்
என்று
பலர் சொல்லி
கேள்விபட்டுருக்கிறேன்...........

ஆம்!
 நடந்துவிட்டதே

நேற்று
உன்னுடனிருந்த
நேரங்களில்.....

எத்தனை
சந்தோசம்

எவ்வளவு
 சிரிப்பு

ஆனந்தம்
மகிழ்ச்சி..........
.எனை மறந்தேன்
சில வேளைகளில்............

ஆனால்
உன்னைபிரிந்த
மறுநிமிடம்

என்
கண்களில்
குளமாய்
நதியாய்
கடலாய்
வழிந்தோடியது
கண்ணீர்...

முடியவில்லை
என்னால்
கட்டுபடுத்த
உன்
 நினைவுகளை...........JVJ

Wednesday, 14 November 2012


மறுபிறவி
................................

மகனே.....
நீ
 மழலையல்ல
என் மறுபிறவி..........


இப்பொழுது
என்னையே
 காண்கிறேன்


மழலையாய்
நான்..............
இந்த பூமியில்
 மீண்டும்....
.உன்னுருவில்......JVJ

Friday, 9 November 2012


வேண்டுதல் 
..........................................


தொலைத் தொடர்பு
வளர்ச்சியினாலே
தொடர்ந்தது
  நம்
 நட்பென்றாலும் ..........

 அன்பைவெளிப்படுத்தி
ஆதரவாய் பேசினாய் .........

புதிய தகவல்களை
எனக்களித்து
புத்துணர்வு  மூட்டினாய் ...........

வாழ்கையில்  நான்
வெற்றிபெற
வழிகளைச்சொல்லி
வாழ்த்தினாய் .....

நாம்
 பேசி தலைப்புகளில்
  அனைத்தும்  அடங்கும் .............


உன்னை நேரடியாக
சந்தித்ததில்லை
இன்றுவரை ..............

என்  தோழியே ........
இந்த ஜென்மம்
இல்லாவிட்டாலும் ...

என்றாவது
ஒருநாள்  உனக்கு
மகனாக
பிறக்கவேண்டுகிறேன் ................JVJ




Tuesday, 6 November 2012



இழந்துவிட்டேன்

............................................

இன்று
மணமுடித்து
கணவனுடன்
மணமேடையில்
நீ 
இருந்தாலும்......


சிறுவயதில்
நாம்
சேர்ந்துவிளையாடிய
அந்த ஞாபகம்
மட்டுமே.......

காலங்கள்தான் 
 எவ்வளவு
வேகமாக
எத்தனை
மாற்றங்களுடன்...........

வாழ்க
வளமுடன்
என்று
பெயருக்கு
வாழ்த்தினாலும்.......

எதோ ஒன்றை
இழந்துவிட்ட
உணர்வுடன்
என் மனது..........JVJ


கடவுச்சொல்
------------------------------

அன்று..
காதலை சொல்ல
காலம் தாழ்த்தியதால்
கனவாகிப்போன
என் காதலியின்
பெயர்...
இன்று
கடவுச்சொல்லாக
என்னுடைய
மடிகணினியில்...................JVJ


Monday, 5 November 2012


சமுதாயம்
----------------------------



ஒரு

விதவை 
கூந்தலின் பூக்களை மட்டுமே
பறிக்கமுடியும்
இந்த 
சமுகத்தால்
அனால்
அவள்
கண்களிலிருந்து வழியும்
கண்ணீருக்கு யார்
காவல் நிற்க முடியும்

அன்று
பூவோடும் பொட்டோடும்
மணக் கோலத்தில்

இன்று
பூவிழந்து
பொட்டிழந்து
புழுதியில்................

இதுதான் இன்றைய
சமூகத்தின் நிலைப்பாடு.
.
இறைவா....
என்று மாறும் இந்த
நிலை...( சாதி, மதம், இனம்
மற்றும் மொழி
வேற்றுமை இல்லாத
மனிதாபிமான
வாழ்கை
இந்த உலகத்தில்............ JVJ

அம்மா

------------------------
என் மனம்
என்னவென்று யாருக்கு
தெரியும்
உன்னைத்தவிர
ஏனெனில்........
என்னுள் இருப்பவள்
நீதானே
என்றும்
என் தெய்வமாய்..............JVJ
மின்சாரம்

-------------------------
அடியே...

சம்சாரத்தின்
தேவையைவிட
உன் தேவை
அதிகமாக
இருக்கிறது..............
நீ என்னுடன் இருந்தால்
நான்
மகிழ்கிறேன்..
அனால்
நீயோ
என் முழு
தேவையை
புரிந்துகொள்ளாமல்
சில நேரம்
மட்டும்
வந்துவிட்டு
சென்றுவிடுகிராயே
இது நீயாயமா........JVJ

நிலா
----------------------------

என்
அன்னை
எனக்கு
அறிமுகபடுத்திய
முதல்
காதலி............... JVJ.
2

நட்பு

..............................
எப்பொழுதும்
எனை மயக்கும்
குழந்தையின் கல கல
சிரிப்பு.....
பேஸ் புக்
ஆன் செய்தால்
தினம் தினம்
தொடருது
புது
புது நட்பு.................................. JVJ





























நிலாபெண்..............

நான் பயணித்த போது
அவளும் பயணித்தால்
எவ்வளவு பிரகாசம்
அவள் முகத்தில்......

நான் அவளை
பார்த்துக்கொண்டிருப்பேன்
அவளும் என்னையே
பார்த்துக்கொண்டிருபதாய்
நினைத்துக்கொள்வேன்...........

எங்களுடைய பயணம்
சாலைகளை கடந்து
மலைப்பாங்கான பகுதிகளிலும்
சென்றுகொண்டிருந்தது........

சில நேரங்களில்
அவள்
 மிக என்னருகில்
முத்தமிட நினைத்தேன்...........

 
ஆனால்
தொட்டுவிடும்
தூரம் தான்
என்றாலும்
முடியவில்லை
இன்றுவரை....
அவளின் நினைவுகளுடன்.... JVJ

கொசு தொல்லை
--------------------------------
அன்று
மின்விசிறியில்
படுத்து உறங்கிய
 எனக்கு
தினமும்

இப்பொழுது உள்ள
மின் பற்றகுறையால்

இறைவா.......
படுத்த உடன்
உறங்கும் வரம் வேண்டும்

இல்லை என்றல்
அவன்தொல்லை
அதிகமாகிவிடும்
அவன்
 வந்து விடுவானோ
என்ற பயம்........

அப்பப்பா
அவனுடன்
 எத்தனை பேர்
வருவார்களோ...
தாங்காது
என்னுடல்
 இன்றும்.......... JVJ


அங்கீகாரம்.
----------------------------- 

பெண்ணே.....
உன் நவீன
கலாச்சார
பெருமையில்
அழகு போய்விடுமோ....
என்றுவெறுக்காதே
தாய்மையை
ஏனெனில்...
பெண்மையின்
அங்கீகாரமே
உன்
தாய்மை தானே............ JVJ