தமிழ் வழிக்கல்வி
----------------------------
தமிழ் வழிக்கல்வி பயின்று
தலை நிமிர்ந்த தமிழன் நான்
இனிமையான மொழிகளில் ...நம்
வாழ்க்கையில்தான் எத்தனை
நெறிமுறைகள் எழுத்துக்களாக
திருக்குறளைப்போல ...
ஒழுக்கம் நேர்மை கடமை
வீரமென்று
இலக்கியங்கள் கற்றுக் கொடுத்தன பல ...
பிறந்தால் மட்டும் போதுமா
தமிழை முறையாக கற்க வேண்டாமா ?
ஆங்கில மொழி படிப்பதால் நீ
ஆங்கிலேயன் அல்ல..அது
அந்நியமொழி
நமக்குவேண்டாம் இன்றுடன் விட்டொழி .....
தமிழ் வழிக்கல்வி பயின்ற
சாதனையாளர்கள் இவ்வுலகில் பல உண்டு
வரலாறு கலாச்சாரம் பண்பாடு .. அதை
தமிழ்தான் சொல்லிக்கொடுத்தது அன்போடு...இன்று
நானும் வாழ்கிறேன் நற்பண்போடு ...நம்
தலைமுறையும் தொடரட்டும் பல நூற்றாண்டு
பணம் தான் வாழ்க்கையென்று
பதறி ஓடுகிறாய்..
பாதை பல தவறிச்சென்று
பாவமும் செய்கிறாய் ..
தமிழ்வழிக்கல்வி மறந்து
தானே ஒரு வழியைத் தேடி ..
தன்னிலை மறக்கிறாய் .
பன்மொழிக் கல்வியை விரட்டிடுவோம்
தமிழ்வழிக் கல்வியை உயர்த்திடுவோம்
தமிழில் படித்தோருக்கு முன்னுரிமை
தரணி எங்கும் தொடரவேண்டும்
அதன் பெருமை ...................ரோஷினி

No comments:
Post a Comment