--------------------------------------------------
அன்னைத் தமிழே உன்னை வணங்குகிறேன் ..........
இன்றயதமிழன்
உன்னை மறந்து
புரியாத மொழிகளில்
தெரியாமல் பேசி
தினம் தினம்
புலம்புகிறான் ....
பேசும்போதே அவ்வப்பொழுது
தமிழ் கலந்துவிடுமொயென்று
மனம் குழம்புகிறான் ......
பணம் தான் வாழ்க்கையென்று
பதறி ஓடுகிறான் ..
பாதை பல தவறிச்சென்று
பாவமும் செய்கிறான்
..
தமிழ்வழிக்கல்வி மறந்து
தானே ஒரு வழியைத் தேடி ..
தன்னிலை மறக்கிறான் ....
நாகரீகமெனும் நட்புக்காக
நங்கைகளுடன்
நரக வாழ்க்கை வாழ்கிறான் ...
அந்நியமொழியில் அவள் கதைப்பதால்
அடிமையாகிறான் ..........
இன்றைய தொலைக்காட்சி முதல்
திரைப்படம் வரை
சாகடிக்கப் படுகிறாய்
அன்னைத் தமிழே ....உன்னை
தொன்மை மாறா உச்சரிப்புடன்
பேசி பெருமை சேர்த்திடுவோம்
இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டு
பழமையான அன்னைமொழி
இலக்கண மரபுகளையும்
இலக்கியங்களையும் கொண்டதல்லவா ...
செம்மொழியான நம் தமிழ்மொழி
நம் தேசம் மட்டுமல்லாமல்
மலேயா சிங்கப்பூரிலும்
ஆட்சி மொழிகளில் ஒன்றல்லவா...
தொழில்மொழி எதுவாக இருந்தாலும்
அன்னைத் தமிழ்மொழியை வெறுக்காதே
அதுதான் உன் அடையாளம் ..
தமிழை அவமானமாக கருதாதே
ஊர் போற்றும் தமிழ்மொழியை
உலக அரங்கிற்கு எடுத்துச்செல்வோம்..
சாதி மத சாக்கடையால்
தமிழை பிரிக்காதே..
அதுதான் நம் வரலாறு
அதை தினமும் மறக்காதே.............ரோஷினி
No comments:
Post a Comment