Wednesday, 12 December 2012

உன் நினைவுகளையும்
----------------------------------------------------சிறுவயதில் ...
ஓடி ஒளிந்த இடங்கள்
பல உண்டு ...........
அன்று
நாம் கால் பதித்த
தடம் கண்டு
மகிழிந்தோமடி ........
காலங்கள் கடந்து
மீண்டும்
அந்த நினைவுகளுடன்
சொந்த மண்ணில் ......
இன்று ...
எவ்வளவு மாற்றத்துடன்
அந்த இடமெல்லாம்
உயர்ந்த கட்டிடங்களாய்
நிற்குதடி .....
தேடுகிறேன்
மழலையாகி ..........
தொலைத்த நம்
வாழ்வையும்
உன் பசுமையான
நினைவுகளையும்......ரோஷினி
Saturday, 8 December 2012
எழுத்தோலை கவிதை திருவிழா
அன்னைத்தமிழின் இன்றையநிலை
--------------------------------------------------
அன்னைத் தமிழே உன்னை வணங்குகிறேன் ..........
இன்றயதமிழன்
உன்னை மறந்து
புரியாத மொழிகளில்
தெரியாமல் பேசி
தினம் தினம்
புலம்புகிறான் ....
பேசும்போதே தமிழ் கலந்துவிடுமொயென்று
மனம் குழம்புகிறான் ......
நாகரீகமெனும் நட்புக்காக
அந்நியமொழியிக்கு அடிமையாகிறான்...
இன்றைய தொலைக்காட்சி முதல்
திரைப்படம் வரை
சாகடிக்கப் படுகிறாய்..... உன்னை
தொன்மை மாறா உச்சரிப்புடன்
பேசி பெருமை சேர்த்திடுவோம்...
செம்மொழியான தமிழ்மொழி
நம் தேசம் மட்டுமல்லாமல்
மலேயா சிங்கப்பூரிலும்
ஆட்சி மொழிகளில் ஒன்றல்லவா...
தொழில்மொழி எதுவாக இருந்தாலும்
அன்னைத் தமிழ்மொழியை வெறுக்காதே
ஊர் போற்றும் உன்னை
உலக அரங்கிற்கு எடுத்துச்செல்வோம்..
சாதி மத சாக்கடையால்
தமிழை பிரிக்காதே..
அதுதான் நம் வரலாறு
அதை தினமும் மறக்காதே.............ரோஷினி
.
அன்னைத்தமிழின் இன்றையநிலை
--------------------------------------------------
அன்னைத் தமிழே உன்னை வணங்குகிறேன் ..........
இன்றயதமிழன்
உன்னை மறந்து
புரியாத மொழிகளில்
தெரியாமல் பேசி
தினம் தினம்
புலம்புகிறான் ....
பேசும்போதே அவ்வப்பொழுது
தமிழ் கலந்துவிடுமொயென்று
மனம் குழம்புகிறான் ......
பணம் தான் வாழ்க்கையென்று
பதறி ஓடுகிறான் ..
பாதை பல தவறிச்சென்று
பாவமும் செய்கிறான்
..
தமிழ்வழிக்கல்வி மறந்து
தானே ஒரு வழியைத் தேடி ..
தன்னிலை மறக்கிறான் ....
நாகரீகமெனும் நட்புக்காக
நங்கைகளுடன்
நரக வாழ்க்கை வாழ்கிறான் ...
அந்நியமொழியில் அவள் கதைப்பதால்
அடிமையாகிறான் ..........
இன்றைய தொலைக்காட்சி முதல்
திரைப்படம் வரை
சாகடிக்கப் படுகிறாய்
அன்னைத் தமிழே ....உன்னை
தொன்மை மாறா உச்சரிப்புடன்
பேசி பெருமை சேர்த்திடுவோம்
இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டு
பழமையான அன்னைமொழி
இலக்கண மரபுகளையும்
இலக்கியங்களையும் கொண்டதல்லவா ...
செம்மொழியான நம் தமிழ்மொழி
நம் தேசம் மட்டுமல்லாமல்
மலேயா சிங்கப்பூரிலும்
ஆட்சி மொழிகளில் ஒன்றல்லவா...
தொழில்மொழி எதுவாக இருந்தாலும்
அன்னைத் தமிழ்மொழியை வெறுக்காதே
அதுதான் உன் அடையாளம் ..
தமிழை அவமானமாக கருதாதே
ஊர் போற்றும் தமிழ்மொழியை
உலக அரங்கிற்கு எடுத்துச்செல்வோம்..
சாதி மத சாக்கடையால்
தமிழை பிரிக்காதே..
அதுதான் நம் வரலாறு
அதை தினமும் மறக்காதே.............ரோஷினி
தமிழ் வழிக்கல்வி
----------------------------
தமிழ் வழிக்கல்வி பயின்று
தலை நிமிர்ந்த தமிழன் நான்
இனிமையான மொழிகளில் ...நம்
வாழ்க்கையில்தான் எத்தனை
நெறிமுறைகள் எழுத்துக்களாக
திருக்குறளைப்போல ...
ஒழுக்கம் நேர்மை கடமை
வீரமென்று
இலக்கியங்கள் கற்றுக் கொடுத்தன பல ...
பிறந்தால் மட்டும் போதுமா
தமிழை முறையாக கற்க வேண்டாமா ?
ஆங்கில மொழி படிப்பதால் நீ
ஆங்கிலேயன் அல்ல..அது
அந்நியமொழி
நமக்குவேண்டாம் இன்றுடன் விட்டொழி .....
தமிழ் வழிக்கல்வி பயின்ற
சாதனையாளர்கள் இவ்வுலகில் பல உண்டு
வரலாறு கலாச்சாரம் பண்பாடு .. அதை
தமிழ்தான் சொல்லிக்கொடுத்தது அன்போடு...இன்று
நானும் வாழ்கிறேன் நற்பண்போடு ...நம்
தலைமுறையும் தொடரட்டும் பல நூற்றாண்டு
பணம் தான் வாழ்க்கையென்று
பதறி ஓடுகிறாய்..
பாதை பல தவறிச்சென்று
பாவமும் செய்கிறாய் ..
தமிழ்வழிக்கல்வி மறந்து
தானே ஒரு வழியைத் தேடி ..
தன்னிலை மறக்கிறாய் .
பன்மொழிக் கல்வியை விரட்டிடுவோம்
தமிழ்வழிக் கல்வியை உயர்த்திடுவோம்
தமிழில் படித்தோருக்கு முன்னுரிமை
தரணி எங்கும் தொடரவேண்டும்
அதன் பெருமை ...................ரோஷினி
Wednesday, 5 December 2012
குழந்தை தொழிலாளர் முறை
------------------------------------------------------------------------
உலகத்தில் உள்ள அவலங்களில்
இதுவும் ஒன்று ..சில வருட கணக்கின்படி
பல மில்லியன் குழந்தைகளென்று
கொத்தடிமைகளாக
விவசாய முதலாளிகளுக்கு
எடுபிடியாக ..
ஆடு மாடு மேய்ப்பவர்களாக .....
துள்ளித்திரிந்து ஓடியாடி விளையாடும்
இந்த காலகட்டத்தில் ...
டீக்கடை முதல் சாக்கடை வரை
நீங்கள் படும் அல்லல் கண்டு
மனம் வேகுதே
என் உள்ளம் நோவுதே ....
பஞ்சு போன்ற உங்களின்
பிஞ்சு கரங்கள் இன்று கரடுமுரடாய் ...
இரத்தம் கலந்த காயங்களுடன்
கிடைப்பதோ (கயவர்கள் கொடுப்பதோ )
குறைந்த கூலி ..
உங்கள் மனதில் எவ்வளவு வலி
பலநேரங்களில் ஏற்படுகிறது உயிர் பலி ...
ஊரே உன்னை பேசுகிறது .. நீ
அனாதை என்று கேலி ...
குழந்தையும் தெய்வமும் ஒன்று
அது வாயளவில் மட்டுமே...
குழந்தையாகிய தெய்வங்களை
துன்புருத்துவார்களா ....
மற்ற குழந்தை எப்படிஎன்றாலும்
நமக்கென்ன எனும் நிலை மாறி
நம்மால் முடிந்த உதவிகள் செய்து
விழிப்புணர்வு எற்படுத்தி
கல்வியினை புகட்டிடுவோம் ...
குழந்தை தொழிலாளர்களற்ற
புதிய சமூகம் காண்போம்
இந்த நிலை மாற எடுத்துவிடுவோம்
புதிய முடிவு ....அதில்
இருக்கவேண்டும் எப்பொழுதும்
ஒற்றுமை எனும் தெளிவு..............ரோஷினி
Subscribe to:
Comments (Atom)





