Tuesday, 25 December 2012


பெண்ணே 
சுற்றிவர நினைத்த 
என்னை.......உன் 
பார்வையெனும் 
விழிக்கயிற்றால் 
நீ இருக்கும் 
வீதியை 
சுற்ற வைத்துவிட்டாயே 
உனக்கு 


இந்த உலகத்தை 

காந்த விழியா 
இல்லை நீ...... 
கண்ணழகியா..?.............ரோஷினி

கருணை காட்டுவாயா 

----------------------------------------------
என்னையறியாமல்
கொடுத்துவிட்டேன்
என்
காதலை
உன்னிடம்.....
கருணை காட்டுவாயா ?

நம் வாழ்வின்
கனவுகளுக்கு...... ரோஷினி

Friday, 21 December 2012

உறுத்தல் 

-----------------------------
பலவருட 
உன்
 உயந்த 
 நட்பு .....இன்றுதான் 
 என்னை 
உறுத்தியது 
உன்னை 
காதலிக்கிறேனென்று .........ரோஷினி 

பிரசவித்தேன் 

------------------------------------
உன்
பார்வையாலும்
வசிகரப்புன்னகையாலும்
பிரசவித்தேன் ....
என் காதலை
உனக்காக ...............ரோஷினி 

கனவில் 


--------------------------------
சூரியனே ...
எனக்கு ஒரு உதவி செய்...
இன்றைய இரவாவது
தொடரவேண்டும்
பலமணிநேரம் .....
இரவில்தான்
அவள்  வருகிறாள்
என்னோடு
 காதலியாய்
 கனவில்  .............ரோஷினி

Wednesday, 12 December 2012


உன் நினைவுகளையும் 

----------------------------------------------------


சிறுவயதில் ...
ஓடி ஒளிந்த இடங்கள்
பல உண்டு ...........

அன்று
 நாம் கால் பதித்த

தடம் கண்டு
மகிழிந்தோமடி ........

காலங்கள் கடந்து
மீண்டும்
அந்த நினைவுகளுடன்
சொந்த மண்ணில் ......

இன்று ...
எவ்வளவு  மாற்றத்துடன்
 அந்த இடமெல்லாம்

 உயர்ந்த கட்டிடங்களாய்
நிற்குதடி .....


தேடுகிறேன்
மழலையாகி ..........


 தொலைத்த நம்
வாழ்வையும்
உன் பசுமையான
 நினைவுகளையும்......ரோஷினி









Saturday, 8 December 2012


எழுத்தோலை  கவிதை திருவிழா 



அன்னைத்தமிழின் இன்றையநிலை
--------------------------------------------------
அன்னைத் தமிழே உன்னை வணங்குகிறேன் ..........
இன்றயதமிழன் 
உன்னை மறந்து 
புரியாத மொழிகளில் 
தெரியாமல் பேசி 
தினம் தினம் 
புலம்புகிறான்  ....

பேசும்போதே தமிழ் கலந்துவிடுமொயென்று 
மனம் குழம்புகிறான்  ...... 
நாகரீகமெனும் நட்புக்காக 
அந்நியமொழியிக்கு அடிமையாகிறான்...


இன்றைய தொலைக்காட்சி முதல்
 திரைப்படம் வரை 
சாகடிக்கப் படுகிறாய்..... உன்னை 
தொன்மை மாறா உச்சரிப்புடன் 
பேசி பெருமை சேர்த்திடுவோம்...


செம்மொழியான தமிழ்மொழி 
நம் தேசம் மட்டுமல்லாமல் 
மலேயா  சிங்கப்பூரிலும் 
ஆட்சி மொழிகளில் ஒன்றல்லவா...

 தொழில்மொழி  எதுவாக இருந்தாலும் 
அன்னைத் தமிழ்மொழியை வெறுக்காதே 

ஊர் போற்றும் உன்னை 
உலக அரங்கிற்கு எடுத்துச்செல்வோம்..

சாதி  மத சாக்கடையால்  
தமிழை பிரிக்காதே..
அதுதான் நம் வரலாறு
அதை தினமும் மறக்காதே.............ரோஷினி  

.